செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உலகம்


கண் முன்னே வந்து நிற்கிறாய் 
காணமல் போகிறாய் 
நீ நின்ற நொடி மட்டும் 
நீக்காமல் இருக்கிறேன் 

உலகம் படைக்க ஒருவார்த்தை போதுமென்று 
உன் வார்த்தையில் உணர்கிறேன் 
தனியுலகம் ஒன்றை படைக்கிறேன் 
அங்கேயும் உன் நிழலே நிலா

கனவில் மிதக்கிறேன், கவிதைகள் படிக்கிறேன் 
சுகம் கண்டதால் மீண்டும் சுவைக்கிறேன் 
அந்த நொடி மீண்டும் சுரக்கிறேன் 
மீண்டும் என்னுலகம் நுழைகிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக