கண் முன்னே வந்து நிற்கிறாய்
காணமல் போகிறாய்
நீ நின்ற நொடி மட்டும்
நீக்காமல் இருக்கிறேன்
உலகம் படைக்க ஒருவார்த்தை போதுமென்று
உன் வார்த்தையில் உணர்கிறேன்
தனியுலகம் ஒன்றை படைக்கிறேன்
அங்கேயும் உன் நிழலே நிலா
கனவில் மிதக்கிறேன், கவிதைகள் படிக்கிறேன்
சுகம் கண்டதால் மீண்டும் சுவைக்கிறேன்
அந்த நொடி மீண்டும் சுரக்கிறேன்
மீண்டும் என்னுலகம் நுழைகிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக