வியாழன், 27 செப்டம்பர், 2012

பிரியாவிடை



கருத்தமேகம், குறைத்தஒளி, வாடைக்காற்று,
அறிகுறிகள் அனைத்தும் சொல்கிறது
இது பிரியும் காலம், விடைக்கோடு
இத்தனை நாள் எமை சுமந்தாய்,
நிலத்திடை உறம் பிரித்தாய்,
நிலத்தடி நீர் எடுத்தாய், அன்னையே
விடைபெறுகிறோம், விடைக்கோடு


எனில் துளிர்த்து,
என் உயிர் வாழ்வின் ஆதாரங்களே  
வர்ணங்கள் பலதந்து,
என் வசந்தத்தின் தொரனங்களே
மகிழ்வாய் விடைப்பெறுங்கள்.

ஒளியிடை சக்தி பிரித்தீர்கள்
காற்றியிடை களங்கம் கலைந்தீர்கள்,
உணவு சமைத்து என்னை வளர்த்தீர்கள் 
தென்றலாய் பலரின் வியர்வை துடைத்தீர்கள்,
நிழலாய் பல உயிர்க்கு அடைக்கலம் கொடுத்தீர்கள்,
நிம்மதியாய் விடைப்பெறுங்கள்.

புயலை எதிர்த்தீர்கள் 
மழையில் நினைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
கடமை புரிந்தீர்கள் 
பெருமைக்கொள்கிறேன் விடைப்பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக