சனி, 28 ஏப்ரல், 2012

நீ நான்: நீ நிலவில்லை

தென்றலின் சதி மேகத்துள் மறைந்தாய்
நீ நிலவில்லை
உன் கூந்தல் கருமேகம்

நிலவில் ஜீவநில்லையாம்
நாசா சொன்னது
நீ நிலவில்லை
உன் நிழல் நிலா

ஒளி வந்ததால் நிழல் மறைந்துதான் போகும்

1, 2, 3

ஒரு நொடியில், உன்
இரு விழிப்பார்வையால்
முப்பரிமாணங்களில்
நால் திசையிலும், என்
இம்புலனையும் ஆலயவிட்டாய்
ஆறு(தல்) தேடி
ஏழு கண்டத்திலும்
எட்டு திசையுலும்
நவகிரகங்களோடு
பத்தாய் அலைய்ந்தேன்
பித்தாய் திரிந்தேன் !

மழை...

மழை...
சிறு வயது காதலியை
பார்ப்பதுபோல் பார்த்திருந்தேன்
கைகுலுக்கி பிரிந்ததுபோல்
பிரிந்து நின்றேன், ஒதுங்கி நின்றேன்
உன்னோடு கலந்திருந்த, கரைந்திருந்த 
நினைவு மட்டும் ததும்பி நின்றேன்

தண்டனை





இரண்டு நிமிட அமைதி
உன்னை கொன்றதற்கு
எங்களுக்கு நாங்களே கொடுத்துக்கொண்ட
ஆயுள் தண்டனை.

கருணை கொலை





கருணை கொலை தவறில்லை என்றாய்
இந்த அரசியல்வாதிகள்
உன்னையும் கேடுத்துவிடகூடாதேன்று
கருணை கொலை செய்தானோ கோட்சே

அந்த மூணு புள்ளி ...

அர்த்தம் ஆயிரம் கொண்ட
அந்த மூணு புள்ளி ...

நான் எதோ சொல்ல நெனைக்கிறேன் என்றும் ...
அதை சொல்ல முடியாது என்றும் ...
அதை சொல்ல கூடாது என்றும் ...
நமக்கு நடுவே ஒரு திரைஉள்ளது என்றும் ...
நீயே நிரப்பிக்கொள் என்றும் ...
முடிவில்லை என்றும் , இடைவெளி என்றும், தொடரும் என்றும் ..

நீ புரிந்து கொள்வாய் என்பதால்
அது நம் உறவின் ஆழம் ...

காதலர் தின வாழ்த்துக்கள்

காதலர் தின வாழ்த்துக்கள்

உன் காபி சொன்னது
உன் காதலை
கதவோர பார்வை வாசித்தது
உன் கவிதை
உன்னை அணைத்து அளித்தேன்
என் அன்பளிப்பை
I Love You இச்

அம்மா

இதுவரை ...
நீ என்னை சுமந்தாய்
இன்று முதல்...
நான் உன்னை சுமப்பேன்

இதுவரை ...
நான் தான் உனது பெரிய கவலை
இன்று முதல்...
நீ என்னோடில்லை என்பதே என் கவலை

இதுவரை ...
அடிக்கடி அழைப்பால் அன்னை
இன்று முதல் ...
யார் அழைப்பார் என்னை 

பெண்

அந்த ஒரு முந்நூறு நாளுக்காக, இல்லை,
கடைசி எண்ணிரெண்டு மணிக்காக, இல்லை,
அந்த தொண்ணூறு வினாடிக்காக
என்னை சுமந்தவளும், என் கருவை சுமந்தவளும் மட்டுமல்ல
அவள் யாராய் இருந்தாலும் நேசிக்கிறேன் 

நீ நான்:ஒற்றை நொடி

ஆயிரம் கவிதைகள் அருவியாய் கொட்டுதடி
தொட்டு நின்ற பூமி எட்ட தூர போகுதடி
நின்று பார்த்த நட்சத்திரம் அட்சதையாய் தூவுதடி
சுற்றிருந்த காற்றனைத்தும் காணாமல் போகுதடி
ஒற்றை நொடி பார்வையில் அண்டம் நூறு கடந்தேனடி
இந்த ஒரு நொடிக்காக இன்னொரு முறை பார்திடடி

அவன் இவன்

இவன் : ஏன் ...
அவன் : என்னது ...
இவன் : எப்படி ...
அவன் : அப்படித்தான்.
இவன் : அப்ப நானும் ....
அவன் : ஏன் கூடாது.

நிழல்

நிறங்கள் கொண்ட கவிதைக்கேட்டாய்
நிஜங்கள் கொண்ட கவிதை சொன்னேன்
நிறங்களிலா நிழலனதால் நில்லாமல் போனாயோ

கல்லறை

உறையவைக்கும் குளிர்
அச்சுறுத்தும் இருள்
பயமுறுத்தும் தனிம
எதோ ஒரு அழுத்தம்
தூக்கமுமில்லை
கனவுகளும் இல்லை
என் கல்லறையில்.

black hole

I saw a black hole
in one centimeter size
its in your eyes

gravity is very heavy
pulling my soul high

My heart is in sixes and sevens
you and me in the garden of heven!

நன்பேண்டா!!!

மழையில் நீ நினைந்தாலும்
உன் கண்ணீர் நான் அறிவேன்
முகமூடி நீ அணிதாலும்
உன் சோகம் நான் அறிவேன்
உன் மௌனங்களில் அர்த்தம் நான்
நான் உன் நண்பன்
நன்பேண்டா!!!

முதலிரவு

உன்னோடு என் முதலிரவு, முதல்முறையாக
நீ அழுது நான் சிரித்தேன்
நீ உறங்கிய பின்னும் பலமுறை உன்னை ரசித்தேன்
உனக்கு தெரியாமல் உன் விரல்களுக்கு நடுவே என் விரல் ஒளித்தேன்
அன்று அந்த விரல் நோக்கியே பாய்ந்தது என் ரத்தம்
உன் மூச்சு காற்றை சுவாசித்தே அடைந்தேன் என் மோட்சம்
என் விரல் விலக்கி, உனை பிரித்தால் உன் பசியாற்ற உன் தாய்.

கனவு

காதலுமில்லை, காதலியுமில்லை
என் கவிதைகள் மட்டும் காதல் பற்றி
கனவுப்போல், என் கவிதைகள்
வருவது ஏன் தெரியாது 

தேடுதல்

தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ

தெரியாதலால் தேடினேன்
தேடுதலின் சுகம் கொண்டதால் தேடினேன்
தெரிந்துவிடகூடா தென்று தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!

இரவுகளில் தேடினேன்
இரவுகள் இரவு வாங்கி தேடினேன்
உறங்கையில் தேடினேன்
உறங்காமல் தேடினேன்
உறக்கங்களில் தேடினேன்
இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் !!!

கேள்வி









எலி பிடித்த பூனையை
பால் குடிக்க வைத்தோம்
பால் குடித்த பூனை
பசு பிடிக்க போகுமா

நீ நான்: புன்னகை

உன்னிடம் உள்ளது
என்னால் கொள்ளையடிக்க முடியாத நகைகள்
நீயே கொடுத்திடவே முயற்சிக்கிறேன்

கடற்கரை கவிதைகள்

நிலவில்லா வானம்
பாறைகளுக்கும் அலைகளுக்கும் கள்ளகாதல்

நிலா





இரவின் தனிமை
இரவின் அமைதி
இரவின் ஒலி
எனுக்குள்ளே நான் மட்டும்
என் உலகம்
என் காதல்
நான், நிலா

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மரங்கள்


நீ இலைகளை உதிர்த்தது
பனித்துளிகளை சுமக்கத்தான


இலைகளை இழந்ததால்
விதவை ஆன மரங்கள்

இடைவெளி

இடைவெளி இல்லாவிடில்
இல்லை வலி, இருந்தால்
நீயே வெளி, என் இருதயத்தில்
இல்லை ஒலி

விடியல்

இருள் கலைவதா 

கனவு கலைவதா

உறக்கம் கலைவதா

விடியல், 


இல்லை

அக இருள் கலைந்து

கனவை நினைவாக்க

துயில் கலைவதே

விடியல்

மருந்து

மறதி என்னும் மருந்து வேண்டும்
மனதின் காயங்களுக்கு
மகிழ்வாய் இருப்பதற்கு 

கடற்கரை

காதலர்களை பிரிந்த பாறைகள்
ஆறுதலாய் அலை

OPEN SPACE

OPEN SPACE
ஒரே அறையில் நீயும் நானும் 
எதிர் எதிரே நீயும் நானும் 
நீ என்னை பார்க்கிறாய் 
நான் உன்னை பார்கிறேன் 
நீ புன்முறுவல் பூக்கிறாய் 
நான் புன்முறுவல் பூக்கிறேன்
இருவரும் facebook-ல்
வெவ்வேறு நண்பர்களோடு

தலையனை

என் தலை கணம் அறிவாய்
என் சோகங்கள் அறிவாய் 
என் கனவுகள் அறிவாய் 
தலையணை மந்திரம் அறியாய்

உறங்கையில் உன்னோடு 
விழிகையில் உன்னோடு 
மூன்றில் ஒரு பகுதி உன்னோடு

கட்டிலில் என்னோடு 
சவ பெட்டியில் என்னோடு

தலையனே நீயே என்றும் என்னோடு

நிலா


நிலா
நான் சொல்லாத காதலுக்கு
நான் கட்டாத தாஜ்மஹால்
அனால்
அங்கே தான் உறங்குகிறாள்
எனது மும்தாஜ்கள்.

கற்பு

கற்பு
உனக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்
எல்லோரும் கற்பு உடையவர்தான்
ரகசியம் கசியும் வரை .

கற்பு
நீ தேடும் பொருள்
அதை தொலைத்தும்
உன்னை உறுத்தும் பொருள்
உனக்கு உருத்தாவிடில்
நீ உலகம் வெறுக்கும் பொருள்

கற்பு
திருக்குறளின் ஒரு அதிகாரம்
இதிகாசங்களின் கரு
விமர்சிக்க கூடாத வார்த்தை

கற்பு
அது மெய்பொருள் இல்லை
அது பென்னுக்குரியதில்லை
வயதுகுரியதுமில்லை
அது நமக்குளே ஒளிந்திருக்கும்
ஆசை, மிருகம், ரகசியம்
அது இல்லாதவர் யாரும் இல்லை

கற்பு
நமக்கு ஓவாமை யார் புரினும்
பிறர்க்கு ஓவாமை நாம் புரினும்
அதுவே கற்பின்மை.