சனி, 29 செப்டம்பர், 2012

வெண்பா ?



தட்டி தட்டி மேலே ஏற்றுகிறாய் 
மீண்டும் மீண்டும் கீழே விழுகிறேன் 
புவிஈர்ப்பு விசை மட்டும் காரணமில்லை 
உன்  விரல் தொடவே 

<அடி> = சீர் சீர் சீர் சீர்
<அடி> = சீர் சீர் சீர் சீர்
<அடி> = சீர் சீர் சீர் சீர்
<ஈற்றடி> சீர் சீர் ஈற்றுச்சீர் 

தட்+டி தட்+டி மே+லே ஏற்+றுகி+றாய் 
தேமா தேமா தேமா கூவிளங்காய் 
நேர்+நேர் நேர்+நேர் நேர்+நேர் நேர்+நிறை+நேர் 


மீண்+டும் மீண்+டும் கீ+ழே விழு+கிறேன் 
தேமா தேமா தேமா கூவிளம் 
நேர்+நேர் நேர்+நேர் நேர்+நேர் நேர்+நிறை

புவி+ஈர்ப்+பு விசை மட்+டும் கா+ரண+மில்+லை 
தேமாங்காய்  நிறை தேமா ????????
நேர்+நேர்+நேர்  நிறை நேர்+நேர்  நேர்+நிறை+நேர்+நேர்

உன் விரல்  தொட+வே
நேர் நிறை பிறப்பு 
நேர்  நிறை  நிறை+நேர் 





வியாழன், 27 செப்டம்பர், 2012

பிரியாவிடை



கருத்தமேகம், குறைத்தஒளி, வாடைக்காற்று,
அறிகுறிகள் அனைத்தும் சொல்கிறது
இது பிரியும் காலம், விடைக்கோடு
இத்தனை நாள் எமை சுமந்தாய்,
நிலத்திடை உறம் பிரித்தாய்,
நிலத்தடி நீர் எடுத்தாய், அன்னையே
விடைபெறுகிறோம், விடைக்கோடு


எனில் துளிர்த்து,
என் உயிர் வாழ்வின் ஆதாரங்களே  
வர்ணங்கள் பலதந்து,
என் வசந்தத்தின் தொரனங்களே
மகிழ்வாய் விடைப்பெறுங்கள்.

ஒளியிடை சக்தி பிரித்தீர்கள்
காற்றியிடை களங்கம் கலைந்தீர்கள்,
உணவு சமைத்து என்னை வளர்த்தீர்கள் 
தென்றலாய் பலரின் வியர்வை துடைத்தீர்கள்,
நிழலாய் பல உயிர்க்கு அடைக்கலம் கொடுத்தீர்கள்,
நிம்மதியாய் விடைப்பெறுங்கள்.

புயலை எதிர்த்தீர்கள் 
மழையில் நினைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
கடமை புரிந்தீர்கள் 
பெருமைக்கொள்கிறேன் விடைப்பெறுங்கள்.

மலர்



மலர்ந்துவிட்டேன், 
இனி செய்வது என்ன?
ஏதும் செய்யாமல் இரு,
மாலை வரை காத்திரு. 

ஒரு சிறு குழந்தை, 
உன் காம்பு கிள்ளும், 
அப்போதும் சிரித்திரு. 

வண்டு வந்து வட்டமிடும், 
உள்ளிருந்து தேன் உறிஞ்சும், 
அப்போதும் சிரித்திரு. 

தென்றல் வந்து, உன் 
வாசம் திருடிச்செல்லும், 
அப்போதும் சிரித்திரு. 

யாரோ ஒருவன், உனை
பார்த்து மகிழ்ந்திருப்பான், 
என்று மட்டும் நினைத்திரு. 

மனநிறைவோடு மாலை வந்ததும் 
மகிழ்வோடு மரித்திடு.

தண்டவாளம்




நம்மை பிரிக்கும் 
காரணங்கள் ஆயிரமாயினும்
என்னருகே நீ இருப்பதால் 
எதற்கோ காரணமாகிறோம் 

புதன், 26 செப்டம்பர், 2012

கல்

உளியின் முதலடி பட்டதும் 
கல் கேட்டது, சிற்பியே, 
என்னை செதுக்க போகிறாயா ?
என்னவாய் செதுக்க போகிறாய் ?
அழகாய் செதுக்குவாயா? 

அவசரமாய் செதுக்காதே,
உன் உளி தடுமாறக்கூடும்.
அரைகுறையாய் செதுக்காதே,
நிர்கதியாய் நின்றுவிடும்.

கடவுளாய் செதுக்காதே 
சண்டைகள் வரக்கூடும்.
அலங்காரங்கள் செய்து, 
உன் கலையை மறைக்க கூடும். 
அனுமதி சீட்டு போட்டு,
பலரை அனுமதிக்காமல் 
போகக்கூடும். 

தான தலைவனாய் செதுக்காதே, 
பறவைகளின் எச்சத்தில் குளிப்பேன்,
பொய்களின் உச்சத்தில் மிதப்பேன் .

சிற்பியே, முடித்துவிட்டாயா?
நீ செதுக்கிய படிக்கல் எங்கே?

சிற்பியே, என் கூர்மையான 
முனைகளை மழுப்பிவிடு.
காயப்பட்டது,
நான் மட்டுமாக இருக்கட்டும்.

மாற்றம்



தெரிந்தே மாறுகிறோம் 
இல்லை மாறியப்பின்
தெரிந்து கொள்கிறோம் 
நமக்காக மாறவில்லையென்று

தெரிவதேயில்லை 
ஏன் மாறினோமென்று,  யாரும் 
நமக்காக மாறவில்லையென்றும் 

நித்தமும் மாறிகொண்டிருக்கிறோம்
அரசியல்வாதி பேச்சு போல 

அடையாளம் இழக்கிறோம்.

உனக்கு...




உனக்கு தெரியாது...
உன் பார்வையில் என்னுள் 
ஏற்படும் வேதியல் மாற்றம்.
உன் நிழலில் நான் பெரும் 
பெரும் உஷ்ண ஏற்றம்.

உனக்கு கேக்காது ...
உன்னருகே நானிருக்கையில் 
என் மூச்சுக்காற்றின் வேகம் 
நீ பேசும் பொது 
என் இதய துடிப்பின்  சப்தம் 

உனக்கு புரியாது ...
நான்  வடிக்கும் கவிதைகள் 
உனக்காக  என்று 

சனி, 22 செப்டம்பர், 2012

மாப்பிள்ளை




Facebook ல இது போல ரெண்டு மூணு post பார்த்தேன், feminist க்கு எதிர்பதம் என்னவென்று தெரியவில்லை. மேலே உள்ள வரிகளை படித்தவுடன் எனக்கு மூன்று நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது;

1. வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் ஒருவர் உண்மையான அன்போடு தன்  உறவினர்களுக்கு அன்பளிப்புக்கள் வாங்கி செல்கிறார். சில வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒருவர் முன்னவர் போல் அதிகம் கொண்டு செல்லாத பொது அவர் தூர படுகிறார். இது பின் ஒரு வழக்கமாக மாறி ஊர் திரும்பும் அனைவரும் தன்  உறவினர்களுக்கு அன்பளிப்பு கண்டிப்பாக வாங்கி  வரவேண்டும் என்று மாறியது.

2.வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பும் சிலர் அங்கே கிடைக்காத உண்மையான  சுவை கிடைக்காத மீன் சாப்பிட ஆசைப்பட்டு தன் மற்ற செலவுகளுடன் சேர்த்து மீனுக்கும் அதிகம் கொடுத்து வாங்கி உண்டு, தன் சொந்த மண்ணின் உணவை அதிக விலை கொடுத்து அனுபவித்து கொள்கின்றனர் , பின் இது பழக்கமாகி மீன் விலை என்னவென்றாலும் வாங்க ஆள் இருக்கிறார்கள் என்று எல்லா விலையும் எகிறுகிறது.

3.என்றோ ஒரு மிகவும் அன்பான தந்தை, தன் மகள் மீது வைத்த அளவுகடந்த  அன்பால் அவள் திருமணதிற்கு பிறகு எந்த விதத்திலும் துன்ப படகூடாதென்று அள்ளி கொடுத்து அனுப்பி வைத்து பின் அதுவே பெண் பெற்றோர் கண்டிப்பாக தன் மகளுக்கு திருமணத்தின் பொது கொடுத்து அனுப்பவேண்டும் என்றாகியது.


இதில் யார் செய்தது தவறு, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ?


திங்கள், 10 செப்டம்பர், 2012

யார் வகுத்த நியதி


உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் அதன் மறைவு வரை இரண்டே விதி தான் தற்காத்து கொள்வதும், இனவிருத்தி செய்வதும்
இதில் மனிதனுக்கு மட்டும் 
நீதியும், அநீதியும், பாவமும், பழியும் யார் வகுத்தது 
பெயரும், புகழும், செல்வமும், ஏழ்மையும் யார் வகுத்தது 
மொழியும், இனமும், மதமும், கடவுளும் யார் வகுத்தது 
ஆடையும், அணிகலனும், அலங்காரமும், ஆசையும் யார் வகுத்தது 
கல்யாணமும், சிசுக்கொலையும், கருத்தடையும் யார் வகுத்தது 
படுகொலையும், பதவியும் யார் வகுத்தது 
குற்றனர்ச்சியும், காழுப்புனர்ச்சியும் யார் வகுத்தது
உலகின் எல்லா உயிர் போல நானும் ஒரு சின்னஞ்சிறு உயிர் மட்டுமே.
இதில் மனிதனுக்கு மட்டும்  ஏன்?

எதிர்மறை வாழ்க்கை !



அழுகை வருகையில் சிரிக்கவும் 
சிரிப்பு வருகையில் அழவும் 

பசிக்காமல் புசிக்கவும் 
பசிக்கையில் புசிக்காமலும்

விளையாட நினைக்கையில் படிக்கவும் 
படிக்க நினைக்கையில் விளையாடவும் 

விழித்திருக்க விரும்பையில் தூங்கவும் 
தூங்க விரும்பையில் முழிக்கவும்

காதல் வரும்போது மறுக்கவும் 
மறுக்க வரும்போது காதலிக்கவும் 

சேர நினைக்கையில் பிரியவும் 
பிரிய நினைக்கையில் சேரவும் 

நினைக்க கூடியதை மறக்கவும் 
மறக்க கூடியதை நினைக்கவும் 

கோபம் வருகையில் மன்னிக்கவும் 
மன்னிக்க நினைகையில்  கோபம் கொள்ளவும் 

சாக நினைக்கையில் வாழவும்
வாழ நினைக்கையில் சாகவும் வேண்டும், 

இதில் ,

நினைத்தது போல் நடந்துவிட்டால் 
அதுவே நன் நினைவுகள் 
நினைப்பது போல் நடந்துவிடாதா 
என்பதே நம் கனவுகள் .

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

Facebook



உனக்கு பிடித்ததேர்க்கெல்லாம் Like போட்டாய் 
உன்னை பிடித்ததால் எல்லாத்துக்கும் Like போட்டேன்

தாய்




பிறந்தது முதல் 
உன்னை தாங்கியவள் 
நீ எட்டி மிதித்தபோதும் 
உன்னை சகித்தவள் 
உன் தாய் 

மீண்டும் உன் தாய் மடியில் 
அவள் கருவுவில் 
புகுந்திட நினைத்தால் 

தாய்க்குள் திரும்பும் அதிசயம் 
எல்லோருக்கும் நடக்கும் 
பூமி உன்  தாயென்றால் 

இல்லாவிட்டாலும் ...

Facebook




உனக்கு பிடித்ததேர்க்கெல்லாம் Like போட்டாய் 
உன்னை பிடித்ததால் எல்லாத்துக்கும் Like போட்டேன்

நான்



எனை  கொல்லும்  என்னை, 
யாரிடம் காட்டிகொடுப்பேன் 

என்னோடு உன்வாசம், 
நிரந்தர வாக்குவாதம் 

வெல்லவும் முடியவில்லை, 
கொல்லவும் மணமில்லை

சொல்லிடவில்லை யாரிடமும்,
வெறுத்திடகூடும் என்னை 

நீ,

எனக்குள் இருக்கும்,
என்னுயிர் எதிரி.