சனி, 22 செப்டம்பர், 2012

மாப்பிள்ளை




Facebook ல இது போல ரெண்டு மூணு post பார்த்தேன், feminist க்கு எதிர்பதம் என்னவென்று தெரியவில்லை. மேலே உள்ள வரிகளை படித்தவுடன் எனக்கு மூன்று நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது;

1. வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் ஒருவர் உண்மையான அன்போடு தன்  உறவினர்களுக்கு அன்பளிப்புக்கள் வாங்கி செல்கிறார். சில வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒருவர் முன்னவர் போல் அதிகம் கொண்டு செல்லாத பொது அவர் தூர படுகிறார். இது பின் ஒரு வழக்கமாக மாறி ஊர் திரும்பும் அனைவரும் தன்  உறவினர்களுக்கு அன்பளிப்பு கண்டிப்பாக வாங்கி  வரவேண்டும் என்று மாறியது.

2.வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பும் சிலர் அங்கே கிடைக்காத உண்மையான  சுவை கிடைக்காத மீன் சாப்பிட ஆசைப்பட்டு தன் மற்ற செலவுகளுடன் சேர்த்து மீனுக்கும் அதிகம் கொடுத்து வாங்கி உண்டு, தன் சொந்த மண்ணின் உணவை அதிக விலை கொடுத்து அனுபவித்து கொள்கின்றனர் , பின் இது பழக்கமாகி மீன் விலை என்னவென்றாலும் வாங்க ஆள் இருக்கிறார்கள் என்று எல்லா விலையும் எகிறுகிறது.

3.என்றோ ஒரு மிகவும் அன்பான தந்தை, தன் மகள் மீது வைத்த அளவுகடந்த  அன்பால் அவள் திருமணதிற்கு பிறகு எந்த விதத்திலும் துன்ப படகூடாதென்று அள்ளி கொடுத்து அனுப்பி வைத்து பின் அதுவே பெண் பெற்றோர் கண்டிப்பாக தன் மகளுக்கு திருமணத்தின் பொது கொடுத்து அனுப்பவேண்டும் என்றாகியது.


இதில் யார் செய்தது தவறு, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக