வியாழன், 27 செப்டம்பர், 2012

மலர்



மலர்ந்துவிட்டேன், 
இனி செய்வது என்ன?
ஏதும் செய்யாமல் இரு,
மாலை வரை காத்திரு. 

ஒரு சிறு குழந்தை, 
உன் காம்பு கிள்ளும், 
அப்போதும் சிரித்திரு. 

வண்டு வந்து வட்டமிடும், 
உள்ளிருந்து தேன் உறிஞ்சும், 
அப்போதும் சிரித்திரு. 

தென்றல் வந்து, உன் 
வாசம் திருடிச்செல்லும், 
அப்போதும் சிரித்திரு. 

யாரோ ஒருவன், உனை
பார்த்து மகிழ்ந்திருப்பான், 
என்று மட்டும் நினைத்திரு. 

மனநிறைவோடு மாலை வந்ததும் 
மகிழ்வோடு மரித்திடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக