திங்கள், 10 ஜூன், 2013

மனிதம்



ஆயுதம் ஏதும் அவர்களிடமில்லை 
அறிவிலும் அளவிலும் நமக்கு நிகரில்லை 
ஆயினும் அவர்களை அழிக்க 
ஆயுதங்கள் பல நமக்கு 

போர் தர்மம் அனைத்தும் மீறி 
நிராயுதபாணி அவர்களுடன் 
இரக்கமற்ற போர் செய்யும் 
நாம் உயிர்களில் உயர்ந்தவன் - மனிதன் 
அவர்கள்   கொசு 
 

இந்த கவிதைக்கான கரு இங்கிருந்து சுட பட்டது, நன்றி 


பயமற்ற வாழ்வு

கொசுக்கள்
எல்லா இடங்களுக்குள்ளும்
எப்படியோ நுழைந்துவிடுகின்றன
எறும்புகள்
எந்தப் பாதுகாப்பிலிருந்தும்
எதையாவது கொண்டுவந்துவிடுகின்றன
மின்மினிகளுக்கு
இந்த இருளைக் கடப்பதில்
எந்தக் குழப்பமும் இல்லை
சில்வண்டுகள் கலைத்துவிடுகின்றன
ஊரடங்கு உத்தரவுகளின்
பயங்கர மௌனங்களை
எவ்வளவுக்கெவ்வளவு
சிறியதாக இருக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
பயமில்லாமல் இருக்கலாம்

- மனுஷ்ய புத்திரன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக