வியாழன், 17 மே, 2012

நீ நான்:உரசல்

நெரிசலில் உரசி நின்றோம் 
கண் பார்க்க முடியாமல் 
காதுகள் பார்த்து நின்றோம் 

இதயம் துடித்ததை இருவரும் உணர்ந்தோம் 
தடுமாறி இதயங்கள் இடம்மாறின 
தோள்களோடு நம் மூச்சுகாற்று உரையாடின 

நெரிசல் கலைந்த பின்னும் 
உரசி நின்றோம் மனதுக்குள்ளே 
சிலிர்த்துக்கொண்டோம் கண்கள் பார்த்து
சிரித்துக்கொண்டோம்

உரசிய காயம் மட்டும் நெஞ்சுக்குள்ளே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக