வெள்ளி, 5 அக்டோபர், 2012

அறி'வாலி'யின் ஐடியா - 1


கொஞ்ச நாளா, வாரமா, மாசமா இல்ல வருஷமா எல்லோரும் பேசுற ஒரு விஷயம், பூமி வெப்பமயம் அடைஞ்சிடுச்சு, அதுக்கு காரணம் காற்று மாசுப்பாடு  என்றுதான்  இருக்கு. அதுக்கு தீர்வுகள்ன்னு நிறைய மாநாடு எல்லாம் போட்டு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், மரங்களை வெட்டாமல் இருப்போம், புகை கக்கும் வாகனங்களை குறைவாய் பயன்படுத்துவோம் அப்பிடி இப்பிடின்னு நிறைய சொல்லிட்டாங்க. எல்லாம் சரி ஆனா இப்போ  பிரச்னை என்னவென்றால், நாம் எல்லா  விஷயத்தையும் வேகமா செய்தே   பழக்கப்பட்டதால, நாம்  நட்ட மரம் வளர்வதுக்குள்ளே காற்றை இன்னும் பல மடங்கு நாசமாக்கிடுவோம்.  நம்ப மெதுவா மாசுபடுத்தி இருந்தாலோ, இல்லை முன்னாடியே யோசிச்சு இருந்தாலோ அதை பொறுமையா சரி செய்யலாம். அதனால இப்போ அவசரமான  ஒரு தீர்வு தேவை படுது. 

அதுக்கு என்னுடைய மண்டையில உதிச்ச ஒரு ஐடியா, நம்ப கிட்ட நிறைய பணம் இருக்கு வான்வெளிக்கு நிறைய செலவு செய்றோம், இந்த மரபணு  மாற்றப்பட்ட உயிரனம் ம.மா.உ (GMO - Geniticaly modified Organism )   என்கிற தொழில் நுட்பமும் இருக்கு , இந்த தொழில் நுட்பம்  சரியானதா, ஆபத்தானதா என்ற ஒரு விவாதத்துக்கு பிறகு வருவோம். முதலில் ம.மா.உ பற்றி பார்ப்போம் . ஒரு செடியின் விதையில் ஒரு சில மரபணுக்களை மாற்றம் செய்து பல மடங்கு மகசூல் தரும் ஒரு வித்தை தான் இது, இதற்கு அயல் நாடுகளில் பயங்கிரமான எதிர்ப்பு உள்ளதால் நம்ப ஊர்ல சோதனை செய்றாங்க(ஏன்னா நாம ரொம்போ நல்லவங்க, நிறைய காசு பாக்கலாம் என்று  எவ்ளோ ஏமாத்தினாலும் நம்புவோம் ), இதனால பாதிக்க பட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பற்றி நமது செய்தி தாள்களில் "கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை" என்று படித்து இருப்போம். இந்த தொழில் நுட்பத்தை தற்போது மேலை நாடுகளில் எண்ணெய் உற்பத்திக்கு பயன்பாடாக உள்ள செடிகளையும், விலங்கினங்களுக்கு உணவாக தேவை படும் பயிர் வகைகளையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். சரி நாம விஷயத்துக்கு வருவோம் இந்த அறிவியல் வளச்சியை   நாம் அப்படியே மரங்களின் இலைகளை பெரிதாக்கவும், அது அதிகமாகவோ அல்லது வேகமாகவோ  CO2 உரியவும் மாற்றி அமைத்தால் ஒரு பலன் கிடைக்குமே.

அப்பிடி பண்ணா நிலத்தடி நீரும் சீக்கிரம் காலி ஆகிவிடும், அந்த மரத்துக்கு பக்கத்துல ஒரு புல் பூண்டு கூட முளைக்காது, இது முடியாது, ஆபத்தானது என்று வைத்துக்கொண்டால், இன்னொரு ஐடியாவும் இருக்கு, இந்த இயற்கை நமக்கு காட்டிகொடுத்த ஒளிசெர்க்கை(photosynthesis) முறையை செயற்கை முறையில்   செய்தால்  என்ன , அதை எல்லா விளக்கு கம்பங்களிலும், வாகனகளிலும், வீடுகளிலும் வைத்தால் என்ன? ஒரு Air Purifier போல. 

கண்டிப்பாக எல்லா கண்டுபிடிப்பிலும் ஒரு ஆபத்து இருக்கத்தான் செய்யும். விமானம் கீழே விழுந்துவிடும், கப்பல் மூழிகிவிடும் என்று சொல்லி இருந்தால் ஏதுவும் கண்டுபிடித்திருக்க முடியாது. அந்த ஆபத்துக்கும் முன்கூட்டியே ஒரு தீர்வும் கண்டுபிடித்தால் ஒழுங்காக இருக்கும். 

Society needs both optimists and pessimists. The first invented the airplane while the second invented the parachute.


உடனே ஒரு கும்பல், எனக்குள்ளே இருக்கும் ஒருவனும் கூட சேர்ந்து  டேய் உன் மண்டையில் தோன்றியது யாருக்கும் தோன்றி இருக்காதா, பொய் வேலை எதாவது இருந்தா பார் என்று கத்துவது நன்றாகவே கேட்கிறது. எதோ சொல்லனும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக